Rangammal story
என் கனவுகளை அலங்கரிக்கும் உன் நினைவுகளுக்கு அன்பு வணக்கங்கள். நினைவில் உள்ளதா? இன்று தான் என் காதலுக்கு தூது செல்ல காகிதத்திற்கு உயிர் கொடுத்த நாள். அன்று தான் என் முதல் கடிதம், என் முதல் பயம், முதல் உரையாடல், முதல் குரலிசை கேட்ட நாள். பயம் அறியான் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரன் நான்!!. உன்னை பார்த்ததும் பயந்து ஒளித்தேன் அன்று!!. நிலவின் அழகை தூரத்தில் இருந்து தான் ரசிக்க முடியும், அருகில் வைத்து ரசிக்க முடியாது என்ற கருத்து பிம்பத்தை உடைத்தெரியவே!! காகிதத்திற்கு உயிர் கொடுத்தேன் என் காதல் தூதுவனாக. நட்பு இருக்கு நீ நெஞ்ச நிமித்து என்ற பாடல் வரிகளுக்கேற்ப வரிசையாக நின்றனர். தைரியங்களும் தந்தனர். சுற்றியும் ஆட்கள் இருக்க எனக்கு மட்டும் தனி தீவில் தனியாக மாட்டிக்கொண்டதை போல் பயம்!! அங்கிருந்து நீ வந்தாய் சிறு புன்னகையுடன். திடிரென என் இதயத்தில் மாரத்தான் ஓட்டம் .சற்றும் குறையவில்லை ஓட்டம் துடித்துக்கொண்டே இருந்தது. நானும் அதை வெளிக்காட்டாமல் நடித்துக் கொண்டு இருந்தேன். என்னை ஈர்த்தப்படியே படி...